கரூர்

தனியார் பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற விவசாயி சாவு

DIN

கரூரில் பைக் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். 
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(55). விவசாயி. இவர் வியாழக்கிழமை மாலை தனது பைக்கில் கரூர் நோக்கி வந்துள்ளார். செம்மடை அடுத்த நாவல்நகர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து பள்ளி வேன் ஓட்டுநர் நெரூர் காளிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி(60)என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, காய்ச்சல்: பருவகால நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

SCROLL FOR NEXT