கரூர்

குமாரபாளையத்தில் கோன், அட்டைப் பெட்டி கிடங்கில் தீ விபத்து

DIN

குமாரபாளையத்தில் கோன், அட்டைப் பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்ட கிடங்கில் பிடித்த தீயால், ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை எரிந்து சேதமடைந்தன. 
குமாரபாளையம் புத்தர் தெரு, பட்டத்தரசியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). இவர், அட்டைப்பெட்டி மற்றும் நூல்கள் சுற்றப் பயன்படுத்தப்படும் காகிதக் கோன்கள் விற்பனை செய்து வருகிறார். இவர், தனக்குச் சொந்தமான கிடங்கில் அட்டைப்பெட்டி, நூல்கள் மற்றும் ஜவுளி ரகங்களைக் கட்டப் பயன்படுத்தப்படும் காகித உருளைகள் ஆகியவற்றை அடுக்கி வைத்திருந்தார். 
இந்த நிலையில், இவரது கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை எதிர்பாராமல் தீ பிடித்துள்ளது. 
எளிதில் தீயில் எரியும் பொருள்களான அட்டைப் பெட்டிகளில் பிடித்த தீ மளமளவெனப் பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து, அப் பகுதியினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். குமாரபாளையம் வட்டாட்சியர் ஆர்.ரகுநாதன் நேரில் பார்வையிட்டு, விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டார். குமாரபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT