கரூர்

கரூரில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி

DIN

கரூரில் கண்தானத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
கரூர் லயன்ஸ் சங்கங்கள், அரசு கலைக் கல்லூரி லியோ சங்கம் சார்பில் கண்தான விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. நாரதகான சபா முன்பு துவங்கிய பேரணியை  லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆர்.கே.சேது சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். வட்டாரத் தலைவர்கள் செந்தில்குமார், சண்முகம், பிளாட்டினம் கணேசன், பி. கார்த்திகேயன் , பி.என்.அனந்தநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்கங்களின் மண்டலத் தலைவர் மேலை.பழனியப்பன் கண்தானம் குறித்து பேசினார். அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் கண்தானத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர். 
உழவர்சந்தை, லைட்ஹவுஸ் கார்னர், பழைய திண்டுக்கல் சாலை, ஜவஹர் பஜார் வழியாகச் சென்ற பேரணி நகரத்தார் மண்டபத்தை அடைந்தது. இதில், பல்வேறு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

முஸ்லிம்களை ‘பகடைக்காயாக’ காங்கிரஸ் பயன்படுத்துகிறது: பிரதமா் மோடி

வெள்ளை டீ-ஷா்ட் ரகசியம்? ராகுல் விளக்கம்

SCROLL FOR NEXT