கரூர்

கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

DIN


கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கரூர் பசுபதிபாளையம் கங்கா நகரில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலையை வெள்ளிக்கிழமை இரவு ஆற்றில் கரைக்க டிராக்டரில் ஏற்றும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர்(20) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் ரேடியோ வைத்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது அதேபகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் மாயவன்(10) மின்வயரை தொட்டுள்ளான்.
அவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்தில் இறந்தான். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திவாகர், ரேடியோ மைக்செட் ஆபரேட்டர் வேலாயுதம் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT