கரூர்

அரவக்குறிச்சி அருகே இளம்பெண்ணை கொலை செய்தவர் கைது

DIN


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இளம்பெண்ணைக் கொலை செய்தவரைப் போலீஸார் கைது செய்தனர்.
அரவக்குறிச்சி அருகே வடுகபட்டி கள்ளிக்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவர் ஈரோட்டில் நிதி நிறுவனம் நடத்திக் கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கள்ளிக்காட்டுத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈரோட்டைச் சேர்ந் சசிகலா(26) என்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் சசிகலாவை செல்வராஜ் கொலை செய்தது தெரியவந்தது.
செல்வராஜூக்கும், சசிகலாவுக்கும் தொடர்பு இருந்தநிலையில், வெள்ளிக்கிழமை சசிகலாவை செல்வராஜ் கள்ளிக்காட்டில் உள்ள தோட்டத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று இருவரும் பேசிக்கொண்டிருந்தனராம். அப்போது அடிக்கடி சசிகலாவுக்கு போன் வந்ததால் சந்தேகத்தில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறில் சசிகலாவை சுவரில் மோதி கொலை செய்துவிட்டு செல்வராஜ் தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் சனிக்கிழமை செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT