கரூர்

தேர்தல் பணி: முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

DIN

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள முன்னாள் படைவீரர்கள் வரும் 16-ஆம் தேதி ஆயுதப்படை மைதானத்துக்கு நேரில் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
வரும் 18-ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலில் காவல்துறைக்குத் துணையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்ப விண்ணப்பம் சமர்ப்பித்த முன்னாள் படைவீரர்கள், இளநிலை படை அலுவலர்கள் மற்றும் விருப்ப விண்ணப்பம் சமர்ப்பிக்காத, தேர்தல் பணிக்குச் செல்ல விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் அதற்கான ஆயத்தங்களுடனும், அசல் படைவிலகல் சான்று மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடனும் கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள ஆயுதப்படை மைதானத்துக்கு வரும் 16-ஆம் தேதி காலை 8 மணிக்கு நேரில் வர வேண்டும்.   
மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் 90038-29969 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT