கரூர்

டிராக்டர் உரசியதில் பைக் கவிழ்ந்து 3 வயது குழந்தை சாவு

DIN


டிராக்டர் உரசிச்சென்றதில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 வயது குழந்தை உயிரிழந்தது. 
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்(28). இவர் தனது மனைவி சௌந்தர்யா(26) மற்றும் மாதேஸ்வரன்(3) ஆகியோருடன் பைக்கில் வெள்ளிக்கிழமை இரவு கவுண்டம்பட்டியில் இருந்து அய்யர்மலை சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பும் வழியில், பைக்கின் முன்புறம் மாதேஸ்வரன் அமர்ந்திருந்தான். இந்நிலையில், மேட்டுமருதூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் பைக் மீது உரசிவிட்டுச் சென்றது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், குழந்தை மாதேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சௌந்தர்யா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
புகாரின்பேரில் டிராக்டர் ஓட்டுநர் கிருஷ்ணராயபுரம் அடுத்த கே.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ்(34) என்பவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT