கரூர்

பேருந்தில் இருந்து தவறிவிழுந்த முதியவர் சாவு

DIN


கரூர் மாவட்டம் தோகைமலையை அடுத்த பாதிரிப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கப்பிள்ளை(65). இவர் வெள்ளிக்கிழமை குளித்தலை செல்ல அரசுப் பேருந்தில் ஏறிச் சென்றார். பேருந்து கழூகூர் அடுத்த அக்காண்டி மேடு பிரிவு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். இதில் பேருந்தின் முன் படிக்கட்டு அருகே அமர்ந்திருந்த சங்கப்பிள்ளை தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

SCROLL FOR NEXT