கரூர்

விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியிடத்திற்கு கரூர் மாவட்ட இளைஞர்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் த. அன்பழகன்  வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையின் ஏர்மேன் பணி காலியிடத்திற்கான தேர்வு மார்ச் 14 முதல்17-ம் தேதி வரை இணையதளம் வாயிலாக தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு w‌w‌w.​a‌i‌r‌m‌e‌n‌s‌e‌l‌e​c‌t‌i‌o‌n.​c‌d​a​c.‌i‌n மற்றும் ‌w‌w‌w.​c​a‌r‌e‌e‌r‌i‌n‌d‌i​a‌n​a‌i‌r‌f‌o‌r​c‌e.​c‌d​a​c.‌i‌n  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.  இதற்கான கல்வித்தகுதி : பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி (கணிதம், இயற்பியல்  மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவு) குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண்  அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்பயிற்சி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண் உடன் கூடிய மூன்று வருட பொறியியல் பிரிவில் பட்டயப்படிப்பு மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவில் குறைந்தபட்ச 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். வயது 16 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.  (19.01.1999 முதல்1.01.2003 ஆண்டுக்குள் பிறந்தவர்கள்). வரும் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  தேர்வுக் கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT