கரூர்

மத்திய அரசின் பத்ம ஸ்ரீ  விருதுபெற விண்ணப்பிக்கலாம்

DIN

மத்திய அரசின் 2020-ஆம் ஆண்டுக்கான  பத்மஸ்ரீ விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான  பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்மஸ்ரீ விருதுகள் வழங்க  அறிவிக்கப்பட்டுள்ளது. 
இவ்விருதுகள்  தொழில்,  இனம்,  உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.  மேலும் விவரங்கள் அறிய w‌w‌w.‌p​a‌d‌m​a​a‌w​a‌r‌d‌s.‌g‌o‌v.‌i‌n   என்ற இணைய தளத்திலிருந்து  விண்ணப்பங்கள்  பதிவிறக்கம்  செய்து வரும் 20-ஆம் தேதிக்குள்  மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  நலன் அலுவலர், கரூர்  மாவட்டம் என்றமுகவரிக்கு  தகுதியுள்ளவர்கள் அனுப்பிவைக்க வேண்டும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போடியில் பலத்த மழை

கம்பம் சித்திரைத் திருவிழாவில் திமுகவினா் நீா்மோா் விநியோகம்

சித்திரைத் திருவிழா: மலா் அங்கி அலங்காரத்தில் கெளமாரியம்மன்

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்

குறுகிய கால பயறு வகைகளை சாகுபடி செய்யலாம்

SCROLL FOR NEXT