கரூர்

மலர் மெட்ரிக். பள்ளி தாளாளருக்கு சிறந்த கல்வியாளர் விருது

DIN

கரூர் மலர் மெட்ரிக். பள்ளி தாளாளருக்கு சிறந்த கல்வியாளர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் 17-ஆவது மாநில மாநாடு திருச்சியில் அண்மையில் (ஜூன் 23) அகில இந்திய பத்திரிகையாளர் சங்கம் மற்றும் பிரஸ் கவுன்சில் உறுப்பினர் சபீனா இந்திரஜித் தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர் மேதாபட்கர் கலந்து கொண்டு ஒவ்வொரு துறையிலும் மாநில அளவில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கினார். 
இதில் கல்விச் சேவையில் சிறப்பாகப் பணியாற்றி வருவதற்கான விருது கரூர் தாந்தோணிமலை மலர் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியனுக்கு  சமூக ஆர்வலர் மேதா பட்கர் விருது வழங்கி பாராட்டினார். 
நிகழ்ச்சியில், மாநில தனியார் பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார்,  தலைவர் ப.ந.த.சுபாஷ் மற்றும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT