கரூர் அருகே மாடியில் இருந்து விழுந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கட்டேரிபட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(64). இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் மாடியில் இருந்துள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.