கரூர்

பேக்கரி கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

DIN

காந்திகிராமத்தில் பேக்கரி கடையின் மேற்கூரையை உடைத்து பணத்தைத் திருடிச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தெற்கு காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையப்பன்(61). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டுச் சென்றார். பின்னர் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது, கடையின் பின்புற சுவர் வழியே உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையின் மேற்கூரையைப் பிரித்து உள்ளே புகுந்து ரூ.15,000-த்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT