கரூர்

மூதாட்டியிடம்  7 பவுன் சங்கிலி பறிப்பு

DIN

கரூரில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச்சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர். 
கரூர் தாந்தோணிமலையைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (60). விவசாயி. இவரது மனைவி செல்லம்மாள்(55). தம்பதி இருவரும் கரூரில் உள்ள உழவர் சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 2 மணியளவில் கீரைக்கட்டு கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு பைக்கில் சென்றனர்.  வீட்டின் முன் பைக்கை நிறுத்தியதும், பின்னால் பைக்கில்  வந்த மர்ம நபர், செல்லம்மாள் அணிந்திருந்த 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துள்ளான். அப்போது அவனை ஆறுமுகம் பிடிக்க முயன்றபோது, அவரது செல்பேசியை கீழே போட்டுவிட்டு பைக்கில் நகையுடன் தப்பி ஓடிவிட்டான். ஆறுமுகம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில்  அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து மர்மநபரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT