கரூர்

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் வழங்கல்

DIN


கரூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த செட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைமை ஆசிரியர் ராபர்ட்செல்வக்குமார் தலைமை வகித்தார். 
விழாவில் பள்ளி சார்பில் மாணவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து விழாவில் பள்ளித்தலைமை ஆசிரியர் பேசுகையில், மரக்கன்றுகளை நட்டு நன்கு பராமரிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார்.
 நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். பள்ளி உதவி ஆசிரியர் பாக்கியசெல்வி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT