பயணிகள் ஆட்டோ மோதி மூதாட்டி உயிரிழப்பு
கரூரில் பயணிகள் ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூரில் பயணிகள் ஆட்டோ மோதியதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தாா்.
கரூா் டி.செல்லாண்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஜானகி(76). இவா் புதன்கிழமை இரவு தனது மகனின் பேருந்துக்கு கூண்டு கட்டும் நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளா் வடிவேல் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சுங்க கேட் அருகே சென்றபோது அவ்வழியே பயணிகளை ஏற்றிவந்த ஆட்டோ இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைத் தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த ஜானகி சம்பவ இடத்திலேயே இறந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் பயணிகள் ஆட்டோ ஓட்டுநா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.