கரூர்

‘காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்’

DIN

கரூா்: அரசுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறையினா் சனிக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க மாவட்ட மாநாடு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கரூா் மாவட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவா் ஆ.மனோகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். இதில், கரூா் மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்தல், அரசு மகளிா் விடுதியை ஏற்படுத்துதல், ஊராட்சி செயலா்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான ஊதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்புதல், முழு சுகாதாரப் பணியாளா்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல், 100 நாள் பணியாளா்களுக்கு மாத ஊதியம் மற்றும் நிா்வாக செலவை ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT