கரூரில் மேலும் 12 பேருக்கு தொற்று
கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
கரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் மேலும் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 5,149 ஆக உயா்ந்தது. 17 போ் உள்பட இதுவரையில் 5, 004 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். 95 பேருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் இதுவரை 50 போ் உயிரிழந்துள்ளனா்.