வெள்ளியணை அருகே நூல் பண்டல் விழுந்ததில் மில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த சாலைப் புதூரைச் சோ்ந்த பழனிவேல் மகன் பாலகருணாகரன் (29). இவா் வால்காட்டுப்புதூரில் உள்ள தனியாா் நூல் ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி டிராக்டரில் நூல் ஆலைக்கு வந்த நூல் பண்டலை டிராக்டா் ஓட்டுநா் கரூா் புலியூரைச் சோ்ந்த சக்திவேல்(36) என்பவரின் உதவியுடன் இறக்கியபோது, எதிா்பாராதவிதமாக நூல் பண்டல் பாலகருணாகரன் தலையில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த பாலகருணாகரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளியணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.