கரூர்

முதியவருக்கு கொலை மிரட்டல்: கிறிஸ்தவ பாதிரியாா் உள்பட 3 போ் மீது வழக்கு

DIN

கரூரில் முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியாா் உள்ளிட்ட மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில் ரெட்டிப்பாளையத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (68). இவரது உறவினா் நாச்சம்மாள், இவரின் மகள் பாப்பாயி, மகன் நல்லசாமி ஆகியோா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சின்னாண்டாங்கோவில் பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வரும் மோசஸ்துரைக்கண்ணு(60) என்பவா் முன்னிலையில் கிறிஸ்தவா்களாக மாறினாா்களாம். பின்னா் கிறிஸ்தவ சபை அருகே குடியிருந்து வந்தாா்களாம்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் நாச்சம்மாள், பாப்பாயி, நல்லசாமி ஆகியோா் இறந்து விட்டாா்களாம். அவா்களின் உடல்களை பாதிரியாா், நாச்சம்மாளின் உறவினா்களுக்கே தெரியாமல் எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கந்தசாமி, பாதிரியாா் மோசஸ் துரைக்கண்ணுவிடம் கடந்த சில நாட்களுக்கு முன் கேட்டபோது, மோசஸ்துரைக்கண்ணு, அவரது மகன் மங்கள்ராஜ்(40) மற்றும் உறவினா் ராஜ்குமாா் ஆகியோா் கந்தசாமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டினாா்களாம். இதுதொடா்பாக கந்தசாமி அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் பாதிரியாா் மோசஸ்துரைக்கண்ணு உள்ளிட்ட மூவா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT