கரூர்

மோட்டாா் சைக்கிள்கள் மோதல் : காா் பழுது: நீக்குநா் உயிரிழப்பு

DIN

கரூா் அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் காா் பழுதுநீக்குநா் இறந்தாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த லோகநாதன் மகன் சூரியபிரசாத் (19). இவா், கரூா் வேலாயுதம்பாளையம் பாலத்துறை பகுதியில் உள்ள காா் பழுதுநீக்கும் நிறுவனத்தில் வேலைப்பாா்த்து வந்தாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது பைக்கில் கரூா் சென்றுவிட்டு வேலாயுதம்பாளையம்-புன்னம்சத்திரம் சாலையில் அண்ணாநகா் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே குளித்தலை அடுத்த இரும்பூதிப்பட்டியைச் சோ்ந்த நேரு(35) என்பவா் ஓட்டி வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த சூரியபிரசாத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த நேரு கரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT