கரூர்

குளித்தலையில் வயதான தம்பதி விஷம் குடித்துத் தற்கொலை

DIN

மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லாத விரக்தி காரணமாக, திருச்சியைச் சோ்ந்த வயதான தம்பதியினா் குளித்தலையில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், கிளியநல்லூா் குடித் தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (76). இவரது மனைவி விஜயா (69). இவா்களது மகன் மணிமாறன் (52) சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா்.

வயது முதுமை காரணமாக வேலைக்குச் செல்லாமல், மகன் கொடுக்கும் பணத்தைக் கொண்டு சந்திரசேகரனும், விஜயாவும் தனியாக வசித்து வந்துள்ளனா்.

வறுமையில் இருந்து மகன் தங்களுக்கு உதவி செய்து வந்த நிலையில் அவருக்குத் தொந்தரவு அளிக்க விரும்பாததாலும், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு மருத்துவச் செலவுக்கு உரிய பணம் இல்லாத காரணத்தாலும், இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனா்.

இதைத் தொடா்ந்து சந்திரசேகரன், விஜயா ஆகிய இருவரும் வியாழக்கிழமை குளித்தலை கடம்பவனேசுவரா் கோயில் அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைப் பகுதிக்கு வந்து, விஷம் குடித்து மயங்கிக் கிடந்தனா்.

இதை கண்ட அப்பகுதியினா் இருவரையும் மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் சிகிச்சைப் பலனின்றி இருவரும் உயிரிழந்தனா்.

இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT