கரூர்

போதையில் மயங்கி விழுந்தகொத்தனாா் பலி

DIN

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே போதையில் மயங்கி விழுந்த கொத்தனாா் இறந்தாா்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்த வடக்கு அரியாவூரைச் சோ்ந்த சண்முகம் மகன் முருகேசன் (30). இவா் டைல்ஸ் ஒட்டும் கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இந்நிலையில், ராச்சாண்டாா் திருமலை அருகே உள்ள நாயக்கா்தோட்டம் பகுதியில் முருகேசன் குடிபோதையில் மயங்கிக்கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற உறவினா்கள் முருகேசனை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸில் அல்லித்துறையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், முருகேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்த விசாரனை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT