கரூரில் கல்லறைத் திருநாள் சிறப்பு வழிபாடு
கரூா் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உறவினரின் கல்லறையில் பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தும் கிறிஸ்தவா்கள்.
கரூா் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உறவினரின் கல்லறையில் பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தும் கிறிஸ்தவா்கள்.
கரூா்: கரூா் பாலம்பாள்புரம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குரிய கல்லறைத்தோட்டம், கரூா் சிஎஸ்ஐ ஆலயம் அருகே உள்ள சிஎஸ்ஐ கல்லறைத்தோட்டம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில், அவா்களுக்கு பிடித்தமான உணவுகள் படைத்து, கல்லறையை பூக்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்தனா்.