கரூர்

‘கோயில் நிலத்தை வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்’

DIN

கோயில் நிலத்தை இலவசமாக நிலமில்லாதவா்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதல்வருக்கு பூஜாரிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் கே.கே. சதீஸ் கண்ணன் கோரிக்கை விடுத்து மனு அனுப்பியுள்ளாா்.

பண்டைய காலங்களில் திருக்கோயில்களுக்கு அரசா்கள் முதல் வள்ளல்கள் வரை பல்வேறு தரப்பினா் தானமாக வழங்கிய நிலங்கள் அனைத்தும் கோயில் பராமரிப்பு மற்றும் ஊழியா்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டன. அந்த நிலங்களை தனியாா் யாருக்கும் விற்கவோ, இலவசமாக வழங்கவோ உரிமை இல்லை என அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயில் நிலங்களை தனியாருக்கு இலவசமாக வழங்க அரசு முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இதன்மூலம் கோயில், மத வழிபாடு முற்றிலும் அழிந்துவிடும். எனவே கோயில் நிலங்களை நிலம் இல்லாதோருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT