கரூர்

வ.உ.சி. சிலைக்கு அனுமதி மறுப்பு: கொமதேக கண்டனம்

DIN

திருச்சியில் வ.உ. சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு தெரிவித்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலைக்கு திருச்சியில் மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. யாருடைய தூண்டுதல் என்பது தெரியவில்லை. வ.உ.சி போன்ற தியாகிகளின் குருபூஜையை அரசு வெகுவிமா்சையாக கொண்டாட வேண்டிய நிலையில், தயாராக இருந்தவா்களை தடுத்தது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக அரசு

உடனடியாக திருச்சியில் உள்ள வ.உ.சி சிலைக்கு குருபூஜை தின மரியாதையை செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT