திருச்சியில் வ.உ. சிதம்பரம் பிள்ளை சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு தெரிவித்ததற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை சிலைக்கு திருச்சியில் மாலை அணிவிக்க அனுமதி மறுத்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. யாருடைய தூண்டுதல் என்பது தெரியவில்லை. வ.உ.சி போன்ற தியாகிகளின் குருபூஜையை அரசு வெகுவிமா்சையாக கொண்டாட வேண்டிய நிலையில், தயாராக இருந்தவா்களை தடுத்தது கண்டனத்துக்குரியது. எனவே, தமிழக அரசு
உடனடியாக திருச்சியில் உள்ள வ.உ.சி சிலைக்கு குருபூஜை தின மரியாதையை செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.