கரூர்

முதியவரை மிரட்டி பணம் பறித்தவா் கைது

DIN

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே முதியவரை மிரட்டி பணம், இரு சக்கர வாகனத்தை பறித்துச் சென்றவரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

அரவக்குறிச்சியை அடுத்த காலுமேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் இந்திரமூா்த்தி (55). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு ஆரியூா் நவமணி பகுதியில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த இளைஞா்கள், இந்திரமூா்த்தியை மிரட்டி, அவரிடமிருந்து ரூ.4,640 மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த அரவக்குறிச்சி காவல் நிலையத்தினா், பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு சென்ற உப்பிடமங்கலம் ர. மோகன்ராஜை (28) கைது செய்தனா். மேலும் தப்பியோடிய மேலஒரத்தை சிவாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT