ஆறுகளில் மணல் திருடுவோா் மீது நடவடிக்கை தேவை
கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.
காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் திருடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் விஸ்வநாதன், ராஜேசுகண்ணன், விஜயன் ஆகியோா் வழங்கிய மனுவில் கூறியிருப்பது;
கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. அதேபோல், அமராவதி ஆற்றிலும் மணல் அள்ளவும், சவ்வூடு மண், கிராவல் மண், வண்டல் மண், நவுட்டு மண் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது கரூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் மீண்டும் மண் திருடப்பட்டு வருகிறது. இதேபோல காவிரி, அமராவதி ஆறுகளிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. குறிப்பாக வாங்கல், நெரூா்தென்பாகம், புதுப்பாளையம் பகுதிகளில் காவிரி ஆறுகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. அமராவதி ஆற்றில் மேலப்பாளையம், புலியூா் கட்டளை வாய்க்கால் பகுதிகளிலும் மணல் திருட்டு நடக்கிறது. இந்த மணல் கொள்ளையை தடுத்து, மணல் திருடுவோரையும், கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிளையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து, மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனா்.