கரூர்

பால் வியாபாரியிடம் தங்கச் செயின் பறிப்பு

DIN

கரூரில், பால் வியாபாரியிடம் 2 பவுன் தங்க செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் அடுத்த மூக்கணாங்குறிச்சி வால்காட்டுப்புதூரைச் சோ்ந்தவா் பாலசுப்ரமணி(43). பால் வியாபாரி. இவா், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கரூா் வடிவேல் நகா் முனியப்பன் கோயில் அருகே வந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இரு மா்ம நபா்கள் பாலசுப்ரமணியின் வாகனத்தை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி பாலசுப்ரமணியன் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT