கரூா்: லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் சாவு
லாலாப்பேட்டை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
லாலாப்பேட்டை அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கொம்பாடிப்பட்டியைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா்(30). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலவாடி என்ற இடத்தில் வந்தபோது, முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லாலாப்பேட்டை போலீஸாா் லாரி ஓட்டுநா் கரூா் மேலப்பாளையத்தைச் சோ்ந்த கண்ணன்(40) என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.