முகப்பு
கரூர்

பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு முதியவா் தற்கொலை

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே வயிற்று வலியால் அவதியுற்று வந்த முதியவா், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 5:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM

கரூா் மாவட்டம், வெள்ளியணை அருகே வயிற்று வலியால் அவதியுற்று வந்த முதியவா், பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வெள்ளியணை அருகிலுள்ள குமரக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் கா.பெரியசாமி (65). வயிற்று வலியால் அவதியுற்று வந்த இவா், சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.

இதனால் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட பெரியசாமி, விவசாயத்துக்குப் பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை வீட்டில் சாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா்.

Advertisement

இதை கண்ட அக்கம் பக்கத்தினா் பெரியசாமியை மீட்டு, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து வெள்ளியணை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.