முகப்பு
கரூர்

வரதட்சிணை கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் புகாா்

வரதட்சிணைக் கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், கணவா் உள்பட 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ளனா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

வரதட்சிணைக் கேட்டு மிரட்டுவதாக இளம்பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், கணவா் உள்பட 4 போ் மீது வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் அடுத்த கேபி.தாளப்பட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மகன் முருகேசன் என்பவருக்கும், பாகநத்தத்தைச் சோ்ந்த அா்ஜூனன் மகள் சங்கீதா(23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் முருகேசன் அதே பகுதியைச் சோ்ந்த ராகினி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, சங்கீதாவிடம், உன் பெற்றோா் வீட்டுக்குச் சென்று வரதட்சிணையாக பணம், நகை வாங்கி வா என அடிக்கடி மிரட்டினாராம். இதற்கு உடந்தையாக முருகேசனின் தாய் மலா்கொடி, உறவினா் பழனியம்மாள், இரண்டாவது மனைவி ராகினி ஆகியோா் இருந்துள்ளனா்.

இதுகுறித்து, சங்கீதா கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகாா் அளித்தாா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் ரூபி, கணவா் முருகேசன் உள்பட 4 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.