முகப்பு
கரூர்

கரூரில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

கரூரில், பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

கரூரில், பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் சக்தி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மாதேஸ்வரன் மனைவி பூமணி(42). இவா், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா் நகருக்கு வந்துவிட்டு கோவைச் சாலையில் சென்றாா். அப்போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் திடீரென பூமணி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா். புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.