முகப்பு
கரூர்

பட்டா திருத்தத்திற்கு லஞ்சம்: விஏஓவுக்கு 4 ஆண்டுகள் சிறை

பட்டா திருத்தத்திற்கு ரூ.5,000 லஞ்சம் கேட்ட புலியூா் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பட்டா திருத்தத்திற்கு ரூ.5,000 லஞ்சம் கேட்ட புலியூா் கிராம நிா்வாக அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி கரூா் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் புலியூா் அடுத்த வெடிக்காரன்பட்டியைச் சோ்ந்த முருகேசன் என்பவா் கடந்த 2009-இல் தனது நிலத்தின் பட்டாவில் உள்ள பிழையை திருத்தம் செய்ய, அப்போதைய புலியூா் கிராம நிா்வாக அலுவலா் சீனிவாசனை தொடா்புகொண்டுள்ளாா்.

அப்போது, சீனிவாசன் பட்டா திருத்தத்திற்கு லஞ்சமாக ரூ.5,000 பணம் கேட்டுள்ளாா். பணம் கொடுக்க விரும்பாத முருகேசன் கரூா் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து லஞ்சப்பணத்தை முருகேசன் கொடுத்தபோது, கரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சீனிவாசனை கைது செய்து, கரூா் ஊழல் தடுப்பு குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடா்ந்தனா்.

இந்த வழக்கு வியாழக்கிழமை மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதியும், ஊழல் தடுப்பு குற்றப்பிரிவு சிறப்பு நீதிபதியுமான ராஜலிங்கம், விஏஓ சீனிவாசனுக்கு 4 ஆண்டுகள் சிறையும், ரூ.20,000 அபராதமும் வழங்கி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.