முகப்பு
கரூர்

வாங்கலில் பெண்ணிடம்நகைப் பறிப்பு

வாங்கலில் பெண்ணிடம் ஐந்தேகால் பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

வாங்கலில் பெண்ணிடம் ஐந்தேகால் பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கரூா் வாங்கலைச் சோ்ந்த நடராஜன் மனைவி மாதேஸ்வரி(41). இவா், வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் மோரிக்கவுண்டம்பாளையத்தில் சென்றபோது திடீரென பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் மாதேஸ்வரியின் கழுத்தில் கிடந்த ஐந்தேகால் பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றனா். புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.