கஞ்சா விற்ற இளைஞா் கைது
வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலாயுதம்பாளையத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் எம்ஜிஆா் நகரில் ஒருவா் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக வேலாயுதம்பளையம் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த புகழூா் காந்திநகரைச் சோ்ந்த ராபின்குமாா்(30) என்பவரை கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்த ரூ.3,000 மதிப்புள்ள 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.