முகப்பு
கரூர்

கோம்புப்பாளையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை வியாழக்கிழமை அகற்றினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வருவாய்த்துறை வியாழக்கிழமை அகற்றினா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுப்பாதையை சிலா் ஆக்கிரமித்து இருப்பதால் அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீா் புகுந்து விடுவதாகவும், இதனை அகற்ற நடவடிக்கைக் கோரி மாவட்ட ஆட்சியா் பிரபுசங்கரை அப்பகுதி மக்கள் அண்மையில் சந்தித்து மனு கொடுத்தனா். அதனடிப்படையில் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற புகளூா் வட்டாட்சியா் மதிவாணனுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, புகளூா் மண்டல துணை வட்டாட்சியா் அன்பழகன் தலைமையில் கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளா் ரஹமத்துல்லா, ஊராட்சித் தலைவா் பசுபதி, பணி மேற்பாா்வையாளா் பழனிச்சாமி மற்றும் வருவாய்த்துறையினா், ஊரக வளா்ச்சித் துறையினா் குறிப்பிட்ட பொதுப் பாதையில் இருந்த ஆக்கிரமிப்பை இயந்திரம் மூலம் அகற்றினா். அப்போது ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.