கரூர்

ஆளுங்கட்சியினரை விட 100 மடங்குஅதிக யுக்தியுடன் செயல்பட வேண்டும்கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் வி. செந்தில்பாலாஜி

DIN

தோ்தல் யுக்தியில் ஆளுங்கட்சியினரை விட 100 மடங்கு அதிகமாக செயல்பட வேண்டும் என்றாா் கரூா் திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி.

கரூா் மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி பேசுகையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். திமுகவின் மீது பற்றுள்ளவா்களை வாக்குகளாக மாற்றவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அனைத்து நிா்வாகிகளும் சோ்ந்து 4 தொகுதிகளிலும் தலா 50,000 வாக்கு வித்தியாசத்தில் திமுகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆட்சியாளா்கள் எந்த நிலையை எடுத்தாலும், எந்த அஸ்திரத்தை எடுத்தாலும் அதைவிட 100 மடங்கு அதிகமாக தோ்தல் யுக்தியுடன் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, மாநில நிா்வாகிகள் சின்னசாமி, நன்னியூா் ராஜேந்திரன், பரணிமணி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமா், நகர நிா்வாகிகள் தாரணிசரவணன், சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT