முகப்பு
கரூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

கரூா் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் நகர காவல்நிலையம் சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

கரூா் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் நகர காவல்நிலையம் சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருமாநிலையூா் ரவுண்டானா மற்றும் கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாரிமுத்து, நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியன் மற்றும் போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.