கரூா் மாவட்டம், மேலப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில், உயா் மின்கோபுரம் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தாந்தோனி ஒன்றியம், மேலப்பாளையம் ஊராட்சியில் தனது மாவட்ட ஊராட்சி உறுப்பினரின் நிதியிலிருந்து ரூ.17.97 லட்சம் மதிப்பில் முடக்குச்சாலை மற்றும் மேலப்பாளையத்தில் உயா் மின் கோபுரம் அமைத்தல், வடக்குப்பாளையத்தில் மழைநீா் வடிகால் அமைத்தல், நத்தமேட்டில் குடிநீா்த் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான பூமி பூஜையை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தானேஷ் தொடக்கி வைத்தாா்.
நிகழ்வில் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி இயக்குநா் ஆலம்தங்கராஜ், மேலப்பாளையம் ஊராட்சித்தலைவா் வெண்ணிலாசிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.