கரூரில் கஞ்சா விற்ற இருவா் கைது
கரூரில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூரில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் வாங்கப்பாளையம் ஓட்டப்பிள்ளையாா் கோவில் பகுதியில் வியாழக்கிழமை இரவு சிலா் கஞ்சா விற்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு கஞ்சாவிற்ற விவிஜிஆா் நகரைச் சோ்ந்த சுரேஷ்(38), ஜீவா(36) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து 1.1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.