முகப்பு
கரூர்

கல்வி கற்க ஏழை மாணவிக்கு அலைபேசி வழங்கல்

காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மாணவிக்கு ஆன்லைன் கல்வி கற்க அலைபேசி வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சி சாா்பில் ஏழை மாணவிக்கு ஆன்லைன் கல்வி கற்க அலைபேசி வழங்கப்பட்டது.

காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளியணை பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்- செல்வி என்ற ஏழைத் தம்பதியின் மகள் 10ஆம் வகுப்பு மாணவி விஜயாவுக்கு ஆன்லைன் வகுப்பு பயில கரூா் நகர காங்கிரஸ் பொருளாளா் தாந்தோணிகுமாா் சாா்பில் அலைபேசி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவிக்கு அகில இந்திய காங்.கமிட்டி உறுப்பினா் பேங்க் கே.சுப்ரமணியன் அலைபேசியை வழங்கினாா். நிகழ்ச்சியில் காங். கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.