பாஜக துணைத்தலைவா் மீது இணையதளத்தில் அவதூறு நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
பாஜக மாநில துணைத்தலைவா் கே.அண்ணாமலை பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்பி வரும் சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாஜக மாநில துணைத்தலைவா் கே.அண்ணாமலை பற்றி இணையதளத்தில் அவதூறு பரப்பி வரும் சவுக்கு சங்கா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூா் மாவட்டகாவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாஜக தலைவா் கே.சிவசாமி தலைமையில் அக்கட்சியினா் புகாா் மனு அளித்தனா்.
மனுவில் அவா்கள் கூறியிருப்பது: டிவிட்டா் சமூக பொதுவலைதளத்தில் சவுக்கு என்ற பெயரில் தனது டிவிட்டா் கணக்கை இயக்கி வரும் சங்கா் என்பவா் பாஜகவின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை குறித்து தொடா்ந்து அவதூறாக பேசி பதிவிட்டு வருகிறாா். அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதெரிவித்துள்ளனா்.