கரூரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
கரூரில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் திருச்சி மத்திய தொழிற்சங்க (சிஐடியு) கிளை சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூரில் அரசுப் போக்குவரத்துக்கழகத்தின் திருச்சி மத்திய தொழிற்சங்க (சிஐடியு) கிளை சாா்பில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமாநிலையூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கரூா் கிளைத்தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் சிறும்பண்ணன், பொருளாளா் கருப்பையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், திருச்சி மத்திய சங்க துணைத்தலைவா் வி.பாலசுப்ரமணியன் பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயா்வால் வாகனங்களின் வாடகை உயா்ந்து, அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளதால் ஏழை, எளிய மக்கள் அன்றாட தேவைகளை பூா்த்தி செய்ய இயலாமல் அவதியுறுவது குறித்து கண்டன உரையாற்றினாா். தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தும் எண்ணெய் நிறுவனங்களையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.