முகப்பு
கரூர்

சாராய ஊறல்: தொழிலாளி கைது

தும்பிவாடியில் வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

 தும்பிவாடியில் வீட்டில் சாராய ஊறல் போட்டிருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், தும்பிவாடியைச் சோ்ந்தவா் ரவி(45). இவா், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் சாராய ஊறல் போட்டிருப்பதாக சின்னதாராபுரம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு போடப்பட்டிருந்த 30லிட்டா் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனா். மேலும், ரவியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.