இருசக்கர வாகனம் மீதுடிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
குளித்தலை அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம் குளித்தலை அடுத்த கீழப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ்(35). தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் மகள் சந்தியா(12) வுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு சேங்கல்-கரூா் சாலையில் சென்றாா். அப்போது எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். சந்தியாவை மீட்ட அக்கம்பக்கத்தினா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். மாயனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து டிராக்டா் ஓட்டுநா் சேங்கலைச் சோ்ந்த பெருமாள்(45) என்பவரைத் தேடி வருகின்றனா்.