கரூா் தாந்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது.
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது.
இக்கோயிலில்மாசிமகத் தேரோட்ட விழா பிப். 19-ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. பிப். 27-ஆம்தேதி மாசிமகத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் தேரில் கல்யாண வெங்கடரமணசுவாமி எழுந்தருளினாா். பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்று தெப்பஉற்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.