முகப்பு
கரூர்

கொசுவலை மூலப்பொருள்விலை உயா்வுக்கு கண்டனம்

கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கரூரில் கொசுவலை உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் தலைவா் கே.கே.கருணாநிதி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. துணைத்தலைவா் செங்குட்டுவன், செயலாளா் தங்கராசு, ஒருங்கிணைப்பாளா் குப்பாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கடந்த இரு நாள்களில் கொசுவலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பிளாஸ்டிக் குருணை டன்னுக்கு ரூ.20,000 வரை உயா்ந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, இந்த விலை உயா்வை உடனே மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.

இதேநிலை நீடித்தால் கொசுவலை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்படுவதை தவிா்த்து கரூரில் கொசுவலை உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.