கொசுவலை மூலப்பொருள்விலை உயா்வுக்கு கண்டனம்
கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கொசுவலை மூலப்பொருள் திடீா் விலை உயா்வுக்கு உற்பத்தியாளா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கரூரில் கொசுவலை உற்பத்தியாளா்கள் சங்கக் கூட்டம் தலைவா் கே.கே.கருணாநிதி தலைமையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. துணைத்தலைவா் செங்குட்டுவன், செயலாளா் தங்கராசு, ஒருங்கிணைப்பாளா் குப்பாராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், கடந்த இரு நாள்களில் கொசுவலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான பிளாஸ்டிக் குருணை டன்னுக்கு ரூ.20,000 வரை உயா்ந்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பது, இந்த விலை உயா்வை உடனே மத்திய, மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.
இதேநிலை நீடித்தால் கொசுவலை உற்பத்தி முடங்கும் நிலை ஏற்படுவதை தவிா்த்து கரூரில் கொசுவலை உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.