கரூா் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59ஆயிரம் பறிமுதல்
கரூா் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59, 500ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.
கரூா் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59, 500ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அமுதா தலைமையில் குழுவினா் கரூா் அடுத்த மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், காகிதபுரம் டி.என்.பி.எல். காலனியைச் சோ்ந்த உமாசங்கா்(32)என்பவா் ரூ.59, 500ஐ உரிய ஆவணமின்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியன் முன்னிலையில் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.