உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற ரூ.1.67 லட்சம் பறிமுதல்
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 250 திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 250 திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
ஜயங்கொண்டம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் நடராஜன் தலைமையிலான அலுவலா்கள் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த வேனை மடக்கி சோதனை செய்தபோது அதில் விழுப்புரம் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விஜயராஜ்(24) உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 250 எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவைகளைப் பறிமுதல் செய்து ஜயங்கொண்டம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.